August 17th, 2010 by Ahmad Baqavi
நோன்பாளியின் மாண்பு
நோன்பாளிக்கு சிறந்த பரிசாக சொர்க்கத்தில் ஓர் உயரிய இடம் உள்ளது.அது தான் ரய்யான் எனும் சிறப்பு வாசல் வழியாகச் செல்லும் மிகப்பெரும் பேறு வழங்கப்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :- “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்.
நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் . உடனே அவர்கள் எழு(ந்து வரு)வார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள் அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும் அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்
(அறிவிப்பவர் :சஹ்ல் ரலி நூல் :புஹாரி 1896 )
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு | No Comments »
August 17th, 2010 by Ahmad Baqavi
தேனீக்கள் பற்றிய அதிசயங்கள்!
தேனீக்கள் பற்றி அருள் மறை குர்ஆன் கூறும் வியத்தகு செய்தி அறிவியலுக்கு ஒரு சவாலாக உள்ளது. இது குறித்து அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர்.
தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் பல அதிசயங்கள் குறித்து வெளியிடும் பல உண்மைகளைக் காண்போம்.
இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.
கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். மேலும்.. »
Posted in Uncategorized | No Comments »
August 17th, 2010 by Ahmad Baqavi
அரிய துஆக்கள்
உணவு அபிவிருத்தி ஏற்பட வேண்டுமா? நீண்ட ஆயுளைப்பெற வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) மேலும்.. »
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு | No Comments »
June 13th, 2010 by Ahmad Baqavi
ஹதீஸ் கலை
الفرق بين الحديث والسنة والأثر
இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம்
இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன.. மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, ஹதீஸ் | No Comments »
June 13th, 2010 by Ahmad Baqavi
நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள்
ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும். மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, ஹதீஸ் | No Comments »