Feed on
Posts
Comments

குர்ஆன் முழுவதையும் வாசிக்க அரிய வாய்ப்பு.

அல்-குர்ஆன் – வினாக்கள் ஜுஸ்வு (பாகம்) – 1
1. கேள்விக்கான பதில்களை அல்ஃபாத்திஹா ஸூரா 1, வசனம் 1, முதல் அல்-பகரா ஸூரா 2, வசனம் 141, வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.
2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து இந்த □ கட்டத்திற்குள் ( √ ) இவ்வாறு அடையாளமிடவும்..
3. ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய (Reference- ரெஃபரென்ஸ்) ஸூரா எண், வசன எண்ணை மறக்காமல் குறிப்பிடவும்.
4. மொத்தம் 15 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்..
5. விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : பிப்ருவரி 7, 2012. மேலும்.. »

1.குர்ஆனை கற்பது எளிதானது.

குர்ஆனை அருளிய நாயனே, அதைக் கற்பது யாவருக்கும் மிகவும் எளிதானது எனக் கூறுகிறான்.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

(இந்த) குர்ஆனை புரிந்து கொள்வதற்காகவும் நினைவில் வைத்துக்; கொள்வதற்காகவும் நாம் (உண்மையிலேயே) எளிதாக்கி வைத்திருக் கிறோம் . படிப்பின பெறுவோர் உண்டா? (54:17)

திக்ரு என்ற  சொல்லிற்கு இரு பொருட்கள் உள்ளன. 1) மனனம் செய்வது 2. புரிந்து கொண்டு பாடம் பெறுவது.

சூரத்துல் கமரில் இந்த ஒரே ஒரு வசனம் மட்டும் ஐந்து முறை திரும்பத் திரும்பக் கூறப்படுவதால் இதன் முக்கியத்துவத்தை நமது சமுதாய மக்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ள்னர்.

2. குர்ஆனை கற்றோரே உலகிற் சிறந்தவர்.

‘அகிலத்திற்கு வழிகாட்டும் அருள் மறை அல் குர்ஆனை கற்போரே உலகிற்சிறந்தோர்’ என்ற சான்றிதழையும் வல்லான் அல்லா1; உலக மக்களுக்கு வழங்ககிறான். இதோ நபிகள் நாயம் (ஸல்) கூறுகிறார்கள்.

عَنْ عُثْمَانَ – رضى الله عنه – عَنِ النَّبِىِّ – صلى الله عليه وسلم – قَال

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ  ( صحيح البخاري)

உங்களிற் சிறந்தோர் குர்ஆனைக் கற்றவரும்,அதை கற்றுக் கொடுத்து (செயலாற்றி) வருவோருமாவார்.(ஆதாரம் புகாரி 5027 , அறிவிப்பவர் உத்மான் (ரலி)

3. பொருளணர்ந்து ஓதுவது.

உலகப் பொது மறையின் முதல் வசனமே,

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

ஓதுவீராக! அதுவும் பொருளைப் புரிந்து ஓதுவீராக! (96:1) என்று கூறுகிறது.
பொருளைத் தெரியாது அதைப்புரிந்து கொள்ளவும் முடியாது.

4. குர்ஆனை ஆய்வு செய்யுங்கள்!

அதைப் பொருளணர்ந்து ஓதுவதற்கும் குர்ஆனின் வசனங்களை சிந்தித்து ஆய்வதற்கும் அது காட்டும் நெறியில் வாழ்வதற்கும் குர்ஆன் உலக மக்களை அழைக்கிறது.

كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ

(நபியே! இது பாக்கியம் பெற்ற வேதம். அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையயோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளி யுள்ளோhம்.(38:29)

5. தூய்மையான எண்ணம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையான எண்ணத்தோடு ஆற்றும் செயல்களையே இறைவனும் ஏற்றுக்கொள்;கிறான்.எனவே, குர்ஆனை கற்றுத் தீரவேண்டும் என்ற அசையாத உறுதியோடும் உணர்வோடும் குர்ஆனைக் கற்போமாக!

நபிகள் நாயம் (ஸல்) கூறினார்கள்:-

- عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ – رضى الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ – صلى الله عليه وسلم – يَقُولُ

إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ ) ( صحيح البخاري-1)

 

செயல்களெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது.
(ஆதாரம் புகாரி எண்-1 அறிவிப்பவர்: உமர் (ரலி)

6. எழுதுவதற்கு எழுதுகோலை எடுத்துவிட்டோம்.

இன்று மாற்று மதத்தவரெல்லாம் குர்ஆனை அழகுறக்கற்று அதன் அரிய கருத்துக்களையெல்லாம் உலகறியச் செய்கிறார்கள். தொலைக்காட்சியிலும், நேரிலும் அவர்களின் இஸ்லாமிய உணர்வையும், குர்ஆனிய அறிவையும் கண்டு வியந்து நிற்கிறோம்.
முஸ்லிமாகப் பிறந்து இன்னும் கருத்துக் குருடர்களாக இருப்பதை எண்ணி வெட்கித் தலைகுனிகிறோம்.

இதோ இன்று முதல் குர்ஆனைப் பொருளுணர்ந்து கற்பதற்காக காகிதங்களையும் பேனாக்களையும் கையிலெடுத்து விட்டோம்.

الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ

(அல்லாஹவாகிய)அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். (96:4)

عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

அவனே அறியாத (அனைத்தையும்) மனிதனுக்குக் கற்றுத்தந்தான். (96:5)

7. குர்ஆனைக் கற்போர் உண்டா?

நமது வேதத்தை பொருளுணர்ந்து படிப்போர் உண்டா ? அதைச் சிந்திப்போர் உண்டா? என்ற இறைவனின் இக்கேள்விகளுக்குப்  பதிலாக,
‘ஆம்! இறைவா! இதோ நாங்களிருக்கிறோம்! குர்ஆனைக் கற்பதற்கும்,சிந்திப்பதற்கும், உனது போட்டிக் களத்தில் வெற்றி பெறுவதற்கும், (குர்ஆன்: 38:29, 11:7,67:2) இப்போது நாங்கள் தயாராக உள்ளோம்.

இப்போது நாங்கள் யார் என்பதை உலகறியச் செய்கிறோம்.

أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

உங்களில் சிறந்த செயலுக்குரியோர் யார்? (11:7,67:2 ) என்பது இறைவனின் கேள்வி. ஆகவே,

சிறந்த செயல் வீரர் யார் என்பதை நாம் அல்லாஹ்விடம் நிரூபிப்போமாக!

6. அல்லாஹ்வை வேண்டுவோமாக!

உலகமெல்லாம் குர்னைக் கற்கத்துவங்கிவிட்டது. இனியும் நாங்கள் குர்ஆனை பட்டுத் துணியிலே பொதிந்து வைத்து, கைகட்டிக்கொண்டு அலட்சியம் செய்யமாட்டோம். இதோ படிப்பதற்கு தயாராகிவிட்டோம்.
‘இறைவா! குர்ஆனை கற்பதற்கும் அதன்படி செயலாற்றுவதற்கும் உன் அருளைப் பொழிவாயாக! என நாள்தோறும் உன்னை வேண்டுகிறோம்.

وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا

(மேலும் நபியே!) நீர் கூறுவீராக! இறைவா! எனக்கு அறிவு பெருகச் செய்தருள் (அல்-குர்ஆன் 20:114)

அன்புடன்,

வினாக்கள் தொடரும்…….

அஹ்மத் பாக்கவி.

உலகப் பொதுமறை அல்-குர்ஆன்                 

(மாத வினா-விடை  பொருளுரைப் போட்டி! )

 

குர்ஆன் போட்டி அறிமுகம்

by Dr. Ahmad Baqavi PhD.

இனிய சகோதரர்களுக்கோர் அன்பான வேண்டுகோள்.

குர்ஆன் உலகப் பொதுமறை என்பது இன்று நிருபிக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமியர் என்றில்லாமல் உலகிலுள்ள இஸ்லாமியரல்லாத சகோதரர்களும் குர்ஆனை பொருளுணர்ந்து படிக்கத் துவங்கி விட்டனர்.குர்ஆன் உலக மக்களுக்குக் கூறும் செய்திகளனைத் தையும்
தெரிந்து கொள்ளவேண்டுமெனறு இன்று அனைத்து மத மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஜெர்மனியில் ஆண்டு தோறும் நடக்கும் உலகப் புத்தக கண்காட்சியில் சமீப காலமாக குர்ஆன் மொழி பெயர்ப்புப்  பிரதிகளே அதிகமாக விற்பனையாகி வருவதை அதன் நிர்வாக இயக்குனர் வியந்து கூறுகிறார். இறுதி நாள் வரை  வழிகாட்டும் அதன் ஒப்பற்ற அரிய போதனைகளையும், அறிவியல் நுட்பங்களையும், படித்துத் தெரிந்து கொள்ள உலக மக்கள் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும்.. »

குர்ஆனும் நமது தொடர்பும்
குர்ஆனை உலகப் பொதுமறை என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும்  அதன் உள்ளடக்கத்தையும் அது உலகிற்கு வைக்கும் அழைப்பையும் நம்மில் எத்துனைப் பேர் கூர்ந்து – ஆழ்ந்து கவனிக்கிறோம்? முஸ்லிம்கள் பெருமையாகப் பேசிக் கொள்வதற்காகவோ வெறும் புனிதப் பொருளாகக் கருதிப் பாதுகாத்து வைப்பதற்காகவோ குர்ஆன் இறக்கி வைக்கப்படவில்லை.

 

அதன் ஒளியும் – ஒலியும் உலகத்தாரின் கண்களுக்கும்  செவிகளுக்கும் சென்றாக வேண்டும். அந்தப் பணியை செய்ய முஸ்லிம்கள் தயாராகவில்லை என்றால் அவர்கள் குர்ஆனைப் பற்றி பெருமைப் பேசுவது வெறும் வெத்துப் பேச்சாகவே முடியும்.

குர்ஆனை பொருளறிந்து படிப்பதும்  அதன் கருத்துக்களையும், வாதங்களையும் ஆழ்ந்து சிந்திப்பதும் கட்டாயமாகும்.

அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது.
திருமறையை  சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.  அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது  அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது  இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.

 

எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும். இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர் களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.

 

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் பொருள் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் மொழி பெயர்ப்புகளைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப் படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32,  47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

       (وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ ﴿٣٢

 

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?     (அல்-குர்ஆன் 54:32)

           ( أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا ﴿٢٤

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)
அல்குர்ஆனை ஓதுதல்

 

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.  திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ  கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிவரவேண்டும்.
குறிப்பாக ரமளான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமளானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) – ஆதாரம் : புகாரி)

குர்ஆனின் சிறப்புக்கள்.

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا ﴿٨٢

நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும்  அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ (٥٧

 

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும்  நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّـهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ﴿٩٨

 

நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட iஷத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)

تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ﴿٤٣﴾وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ ﴿٤٤﴾لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ﴿٤٥﴾ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ ﴿٤٦

 

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும்  நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால்  அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர்  அவருடைய நாடி நரம்பை நாம் தறித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)

 

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும்  குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும்  குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா  ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்.)

 خيركم من تعلم القرآن وعلمه

குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். உஸ்மான்(ரலி) புகாரி.
குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்ளூ நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள்  மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். என்பது நபிமொழி. (அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)  ஆதாரம்: தப்ரானி.)

 

பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள் (முஸ்லிம்.)

 

குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) திர்மிதி.

 

குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். ”அலீஃப்  லாம்  மீம்” ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து  லாம் ஒரு எழுத்து  மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இப்னு மஸ்வூத்(ரலி) திர்மிதி  தாரமி.

 

குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும்  ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத முஃமின்களின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபு மூஸா(ரலி) புகாரி  முஸ்லிம்.

 

குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்ட வரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபுஹூரைரா(ரலி) திர்மிதி  நஸயீ  இப்னுமாஜா.

 

நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபுஹூரைரா(ரலி)  முஸ்லிம்  இப்னுமாஜா).

குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர் களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) ஆதாரம்: புகாரி  முஸ்லிம்.)

 

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனின் தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ஆதாரம்: அபூதாவுத்  திர்மிதி.

 

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் ‘இறiவா! இவருக்கு ஆடையை அணிவி’ என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!  அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுஹூரைரா(ரலி) திர்மிதி, இப்னு குஸைமா.)

குர்ஆன் உயிருள்ளவர்களுக்கே வழிகாட்டும்.
இறந்தவர்களுக்கல்ல!

 

குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.

لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ ﴿٧٠

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)

 

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து  சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும்  அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

 

குர்ஆனைப் படித்து  விளங்கி  அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

 

(இந்தக் குர்ஆனில் ) அறியாதவற்றை அறிந்தோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 16:43, 21:7)

 

குர்ஆனுக்கும் ஏனைய வேதங்களுக்குமுரிய வேறுபாடுகள்

குர்ஆனுக்கு இதுவரை இரண்டு இலட்சம் விரிவுரை நூல்கள் வந்துள்ளன. எத்தனை நு{ல்கள் வந்த போதினும் குர்ஆனை முழுமையாக மொழி பெயர்க்கவோ, அதற்கு சரியான விரிவுரை எழுதவோ முடியாது.

 

இன்று நாம் படிக்கும் மொழிபெயர்ப்பு குர்ஆனின் முழுமொழி பெயர்ப்பல்ல. இன்னும் ஆழமான விரிவான பொருள் அதற்குண்டு என்ற நினைவோடு நாம் அதைப் படிக்கவேண்டும்.

ஒரு சொல்லுக்குப் பல பொருள்களும், பலபொருளை உள்ளடக்கிய பல சொற்களும் குர்ஆனில் ஏராளம் உள்ளன.

தேனுக்கு 40 சொற்களும், பாம்புக்கு 200 சொற்களும், சிங்கத்திற்கு 630 சொற்களும், ஒட்டகத்திற்கு  1000 சொற்களும்,  வாளுக்கு  1000 சொற்களும், 3 பொருள்ள சொற்கள் 300 ம்,  நான்கு  பொருளுள்ள சொற்கள் 400 ம், 20 பொருளுள்ள  சொற்கள் 200 ம்  அரபு மொழியில் மலிந்து கிடப்பதைக்  காணலாம்.

இதிலிருந்தே குர்ஆனிய அரபு மொழி வளமைமிக்க மொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

புலமைமிக்க தஃப்ஸீர் கலை மேதைகள் அவற்றின் பொருட் செறிவையும், விரிந்து நிற்கும் விளக்கத்தையும், அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் தெரிந்திருந்தாலும் “ எதையும் இது தான் அதன் பொருள் என அறுதியிட்டுக் கூறமுடியாது. அவை உலக முடிவு நாள் வரையுள்’ள அனைத்துச் செய்தி களையும் உள்ளடக்கி யதையும், அந்தந்த காலத்திற்கேற்ப உணர்த்துவதையும் காணலாம்.

 

அதன் விரிவான பொருள் விண்ணைவிட விரிவானது. கடலைவிட ஆழமானது என்பதை இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் கூறுவதைப் படியுங்கள்.

அதன் நடை அழகிலும்,.கருத்தாழத்திலும் முத்துக்களைவிட மேலானது.  கருத்துக்களோ கடல் அலையைப் போன்று விரிந்து கொண்டே போகும்.

لها معات كموج  البحــرفي
مدد  + وفوق جوهره في الحسن والقيــم

குர்ஆனுக்கும்
ஏனைய வேதங்களுக்குமுரிய வேறுபாடுகள்:-

  1. குர்ஆன் அதன் மூலமொழியிலேயே ஓதப்படுகிறது. ஏனையை வேதங்களை மூலமொழியின்றி அதன் மொழிபெயர்ப்பையே படிக்கிறார்கள்.

உ-ம்

  1. மோஸஸின் ஓல்டு டெஸ்டு மென்ட் (பழைய ஏற்பாடு) ஏபிரேய மொழி ( ஹீப்ரு – கிரேக்க மொழியில் உள்ளது.
  2. இயேசுவின் நியூ டெஸ்டுமென்ட் அராமிக் மொழியலுள்ளது.
  3. பாரசீகர்களின் ஜெந்த அவஸ்தா பாரசீக மொழியிலுள்ளது.
  4. பிராமணர்களின் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம்  வேதங்கள் சமஸ்கிருத மொழியிலுள்ளது.
  5. புத்தர்களின் “ தம்மபதம்” பாலி மொழியிலுள்ளது.

 

2.  குர்ஆன் தூய்மையான எல்லா இடங்களிலும் ஓதப்படுகிறது. ஏனைய வேதங்கள் குறிப்பிட்ட இடங்களில்,குறிப்பிட்ட திருநாட்களில் மட்டுமே படிக்கப்படுகின்றன.

 

3.குர்ஆன் படித்தவர் முதல், பாமரர் வரை,குருமார் முதல், சாதாரண மனிதர் வரை ஓதப்படுகிறது. ஏனைய வேதங்கள் குருமார்களால் மட்டுமே ஓதப்படுகன்றன.

 

4. குர்ஆன் 24 மணிநேரமும் எல்லா நேரங்களிலும் ஓதப்படுகின்றன. ஏனைய வேதங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படிக்கப்படுகின்றன.

 

5. ஏனைய வேதங்களுக்கு நேரடியான குறிப்பிட்ட பொருள்களே உள்ளன. ஆனால் குர்ஆனுக்கு அப்படியல்ல. குர்ஆனுக்கு நேரடிப் பொருள் இதுதான் என்று திட்டமாகக் கூறமுடியாது. அதற்கு விரிந்த பல பொருள்களும் உள்ளன. அதளால் தான் குர்ஆனின் முகப்பிலேயே தர்ஜுமத்து மஆனில் குர்ஆன் “குர்ஆன் மொழிபெயர்ப்பின் கருத்துரை”என எழுதப்பட்டிருக்கும்

 

6. ஏனைய வேதங்களுக்கு விளக்கவுரைகள் கிடையாது.ஆனால் குர்ஆனுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தஃப்ஸீர்கள் விரிவுரைகள் உள்ளன.

 

7. குர்ஆனின் விளக்கவுரையைப் படித்தே உலகோர் வியக்கின்றனர். ஆனால் (டெக்ஸ்) மூலமொழியைக் கற்றாலோ ?

 

8. விரிவுரையைப் படித்தே பலரும் இஸ்லாத்தில் இணைந்த வண்ணமுள்ளனர்.

 

9. ஏனைய வேதங்கள்   உரை நடையாகவோ, கவிதையாகவோ, பாடல்களாகவோ, இசையாகவோ உள்ளன. குர்ஆன் உரைநடை யுமல்ல. கவிதை நடையுமல்ல.இரண்டும் கலந்தவை. உரை நடையிலும்.மேலான உயர் நடை. கவிதையிலும் மேலான கவின் நடை.இதனால் தான் It is the greatest literature in the world என உலகோரால் போற்றப்படுகிறது.

தொடரும்….